X டியாவெல் மற்றும் மல்டிஸ்ட்ரடா என்டுரோ மாடல்களின் முன்பதிவை இந்தியாவில் தொடங்கியது டுகாடி

இத்தாலியை சேர்ந்த மோட்டார் சைக்கிள் நிறுவனமான டுகாடி இந்தியாவில் X டியாவெல்  மற்றும் மல்டிஸ்ட்ரடா என்டுரோ மாடல்களின் முன்பதிவை தொடங்கியது. இந்த இரண்டு மாடல்களையும் ரூ. 1 லட்சம் முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இதன் டெலிவெரி ஜூலை மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X டியாவெல் மாடல் டியாவெல் மாடலில் இருந்து மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும். மேலும் டியாவெல் மாடல் தான் டுகாடி நிறுவனத்தின் முதல் குரூசர் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த மாடலில் 1262 cc கொள்ளளவு கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 156 bhp திறனையும் 128.5 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3 வினாடிகளுக்குள் கடக்கும் வல்லமை கொண்டது. இந்த மாடலில் ட்ராக்சன் கன்ட்ரோல், ரைடர் மோட், ஆண்டி லாக் ப்ரேக் மற்றும் குரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியாவை கிடைக்கும்.

டுகாடி  மல்டிஸ்ட்ரடா என்டுரோ மாடல் ஒரு ஆப் ரோடு டூரர் ரகத்தை சேர்ந்தது.  இந்த மாடலில் 1198 cc கொள்ளளவு கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 160 bhp திறனையும் 136 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடல்களின் விலை தொடர்பான விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள மௌவளுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.