மீண்டும் இந்தியாவில் வெளியிடப்பட்டது ஜாவா மோட்டார் பைக்; மூன்று புதிய மாடல்கள் அறிமுகம்

ஜாவா மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஜாவா, ஜாவா 42 மற்றும் பாபர் வடிவமைப்பிலான பெராக் என மூன்று மாடல்களை முறையே ரூ 1.64 லட்சம், ரூ 1.55 லட்சம் மற்றும் ரூ 1.89 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல்களின் முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இவற்றில் ஜாவா மற்றும் ஜாவா 42 மாடல்களின் விநியோகம் அடுத்த வருட ஆரம்பத்திலும், பாபர் வடிவமைப்பிலான பெராக் மாடலின் விநியோகம் அதைத்தொடர்ந்து ஒருசில மாதங்களிலும் தொடங்கப்படும். மஹிந்திரா நிறுவனம் தான் கிளாசிக் லெஜெண்ட்ஸ் எனும் நிறுவனம் மூலம் ஜாவா மோட்டார் பைக் மாடல்களை இந்தியாவில் மீண்டும் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எஸ்டி மற்றும் BSA பிராண்ட் பைக்குகளையும் வெளியிட திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல்கள் அப்படியே கிளாசிக் ஜாவா பைக் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜாவா மற்றும் ஜாவா 42 மாடல்களில் மஹிந்திரா மோஜோ மாடலில் உள்ள 293CC கொள்ளளவு கொண்ட 4 ஸ்ட்ரோக் லிக்யூட் கூல்ட், BSVI மாசுக்கட்டுப்பாட்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 27 Bhp திறனும் 28 Nm இழுவை திறனும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஆறு ஸ்பீட் கியர் பாக்ஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல், பாபர் வடிவமைப்பிலான பெராக் மாடலில் 334CC கொள்ளளவு கொண்ட 4 ஸ்ட்ரோக் லிக்யூட் கூல்ட் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 30 Bhp திறனும் 31 Nm இழுவை திறனும் வழங்கும். 

ஜாவா மற்றும் ஜாவா 42 மாடல்களில் முன்புறம் ABS உடன் கூடிய 280mm டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 153mm ட்ரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் பாபர் வடிவமைப்பிலான பெராக் மாடலின் இரண்டு வீல்களிலும் ABS உடன் கூடிய டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது.  ஜாவா பைக் பிரியர்களுக்கு இந்த மாடல் கண்டிப்பாக பிடிக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல், இந்த மாடல்கள் ராயல் என்பீல்ட் மாடல்களும் கடும் போட்டியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.