நோர்டன் மற்றும் BSA பைக் பிராண்டுகளை கையகப்படுத்தப் போகும் மகிந்திரா

இந்தியாவின்  மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான மகிந்திரா பிரிட்டனை சேர்ந்த கிளாசிக் மோட்டார் பைக் நிறுவனங்களான நோர்டன் மற்றும் BSA பிராண்டுகளை கையகப்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மகிந்திரா நிறுவனம் கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள், கார்கள்,SUV  கள், பைக்குகள், ஸ்கூட்டர்கள் என அனைத்து விதமான செக்மென்டையும் கொண்டுள்ள ஒரு மிகப்பெரிய இந்திய நிறுவனம். மகிந்திரா தனது தொழில் வளர்ச்சியை பெருக்கவும் உலகம் முழுவது தனது பிரண்டை விரிவுபடுத்தவும் ஏற்கனவே கொரியாவை சேர்ந்த சாங் யாங், பிரான்சை சேர்ந்த பியாஜியோட் மற்றும் பினின்பரினா டிசைன் நிறுவனங்களை கையகப்படுத்தியுள்ளது.

தற்போது  நோர்டன் மற்றும் BAS பைக் பிராண்டுகளை கையகப்படுத்த இருக்கிறது. இந்த இரண்டு பிராண்டுகளுமே  ராயல் என்பீல்ட் போல் கிளாசிக் மற்றும் விண்டேஜ் டிசைனில் மோட்டார் பைக்குகளை தயாரிக்கும் நிறுவனங்கள். இது இரண்டு சக்கர வாகன சந்தையில் போராடி வரும் மகிந்திரா நிறுவனத்திற்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.