ABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் தண்டர் பேர்ட் 350X

ராயல் என்பீல்ட் நிறுவனம் தண்டர் பேர்ட் மாடலின் அடிப்படையிலான புதிய தண்டர் பேர்ட் 500X மற்றும் 350X மாடல்களை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. தற்போது, ABS பிரேக் உடன் கூடிய  தண்டர் பேர்ட் 350X மாடலை ரூ 1.63 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இது சாதாரண மாடலை விட தோராயமாக ரூ 6000 அதிகம் ஆகும். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு அணைத்து ராயல் என்பீல்ட் பைக்குகளும் ABS உடன் வெளியிடப்படும் என ராயல் என்பீல்ட் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடலின் வடிவமைப்பு மற்றும் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை கூடுதலாக ABS பிரேக் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்ட் மாடல்களில் முதன் முறையாக இந்த மாடலில் தான் அலாய் வீல் மற்றும் டியூப் லெஸ் டயர் கொடுக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த மாடலின் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே 346cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 19.8 bhp (5250rpm) திறனும் 28 NM (4000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடலின் முன்புறத்தில் 280 மில்லி மீட்டர் விட்டமும் பின்புறத்தில் 240 மில்லி மீட்டர் விட்டமும் கொண்ட டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் தண்டர் பேர்ட் 500X மாடலும் விரைவில் ABS பிரேக் உடன் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.