நவம்பர் 15 ஆம் தேதி மீண்டும் வருகிறது ஜாவா மோட்டார் பைக்

இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான மகிந்திரா பிரிட்டனை சேர்ந்த கிளாசிக் மோட்டார் பைக் நிறுவனமான BSA பிரண்டை கையகப்படுத்தியது அனைவரும் அறிந்ததே. மேலும் BSA பிராண்டை கையகப்படுத்தியது மட்டுமில்லாமல் ஜாவா பைக்கை மீண்டும் இந்தியா மற்றும் ஒருசில ஆசிய நாடுகளில் வெளியிடும் உரிமத்தையும் பெற்றது மஹிந்திரா நிறுவனம். எனவே விரைவில் இந்திய சாலைகளில் BSA மற்றும் ஜாவா பைக்குகளை காண முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது மஹிந்திரா நிறுவனம் புதிய ஜாவா மோட்டார் பைக் வரும் நவம்பர் 15 ஆம் தேதி வெளிப்படுத்தப்படும் என சமூக வலைதள பக்கம் மூலம் அரிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மஹிந்திரா நிறுவனம் எஞ்சின் படங்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த எஞ்சின் 295CC கொள்ளளவு கொண்ட 4 ஸ்ட்ரோக் லிக்யூட் கூல்ட் என்ஜின் ஆகும்.  இந்த என்ஜின் 27 Bhp திறனும் 28 Nm இழுவை திறனும் வழங்கும். மேலும் இந்த எஞ்சின் நேரடியாக BSVI மாசுக்கட்டுப்பாட்டில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மகிந்திரா நிறுவனம் கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள், கார்கள்,SUV கள், பைக்குகள், ஸ்கூட்டர்கள் என அனைத்து விதமான செக்மென்டையும் கொண்டுள்ள ஒரு மிகப்பெரிய இந்திய நிறுவனம். மகிந்திரா தனது தொழில் வளர்ச்சியை பெருக்கவும் உலகம் முழுவது தனது பிரண்டை விரிவுபடுத்தவும் ஏற்கனவே கொரியாவை சேர்ந்த சாங் யாங், பிரான்சை சேர்ந்த பியாஜியோட் மற்றும் பினின்பரினா டிசைன் நிறுவனங்களை கையகப்படுத்தியுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.