INS விக்ராந்த் இரும்பிலிருந்து செய்யப்பட்ட பஜாஜ் V15 பைக் வெளியிடப்பட்டது

பஜாஜ் நிறுவனம்  எனும் இந்தியாவின் விமானம் தாங்கி போர் கப்பலின் இரும்பில் இருந்து செய்யப்பட்ட V15 எனும் புத்தம் புதிய மோட்டார் பைக் மாடலை வெளியிட்டுள்ளது. இந்த INS விக்ராந்த் எனும் போர் கப்பல் இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர் கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது. 1997 ஆம் ஆண்டு வரை இந்த கப்பல் இந்திய கப்பல் படையில் மிகப்பெரிய பங்காற்றியது. அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த கப்பல் உடைத்து தனித்தனியாக பிரிக்கும் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு பஜாஜ் நிறுவனம் இந்த கப்பல வாங்கியதிலிருந்து ஒரு புத்தம் புதிய பைக் தயாரிக்கப்படும் என அறிவித்தது.

இந்த மாடலில் பல்சர் மாடலில் உள்ள 149.5 cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 12 bhp (7500rpm)   திறனும் 13 NM (5500rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. 

பழமையான் வடிவத்தின் அடிப்படையில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் வித்தியாசமான தோற்றத்தை தருகிறது. இதன் பெட்ரோல் டேங்கில் INS விக்ராந்த் எனும் லோகோ பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் கருப்பு மற்றும் வெள்ளை எனும் இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். மேலும் பின்புற இருக்கையில் ஒரு கௌல் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது இதனை பொருத்துவதன் மூலம் ஒற்றை இருக்கை கொண்ட மாடலாக மாற்றலாம்.    

இந்த மாடலின் டெலிவரி மார்ச் மாதம் முதல் தொடங்கப்படும். மேலும் இந்த மாடல் ரூ.60000 முதல் 70000 விலை கொண்டதாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.