சத்தமில்லாமல் விரைவில் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் மகிந்திரா

மகிந்திரா நிறுவனம்  விரைவில் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய உள்ளது. சத்தமில்லாமல் இதுவரை எந்த ஒரு சோதனை படமும் இணையத்தில் கசிய விடாமல் அணைத்து சோதனைகளையும் செய்து முடித்து தற்போது வெளியிடும் நிலைமை வரை அடைந்து விட்டது.

இந்த ஸ்கூட்டர் தொடர்பான எந்த ஒரு தகவலும் மகிந்திரா நிறுவனம் வெளியிடப்படவில்லை ஆனால் ஒரு ஸ்கூட்டர் மாடல் விரைவில் வெளியிடப்படும் என தெரிவத்துள்ளது. இந்த மாடல் 110 cc கொண்ட பெண்களுக்கான பிரத்தியேகமான மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் மகிந்திரா நிறுவனம் 110 cc அடிப்படையிலான ஒரு மாடலை சோதனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.