ரூ.1.75 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது ராயல் என்ஃபீல்ட் - ஹிமாலயன்

இறுதியாக  ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹிமாலயன் மாடலை ரூ.1.75 லட்சம் சென்னை ஷோ ரூம் விலையில் வெளியிட்டது. இதன் முன்பதிவு  மற்றும் டெஸ்ட் டிரைவ் நாளை முதலும் விநியோகம் விரைவிலும் தொடங்கப்படும்.

இந்த மாடல் ஆஃப் மற்றும் டூரர் எனும் புதுமையான வகையை சேர்ந்தது. இது இந்த செக்மெண்டில் வெளியிடப்படும் முதல் மாடல். நீண்ட தூரம் மற்றும் இமயமலை பயணம் செய்வோரை மனதில் வைத்து இந்த மாடலை உருவாகியுள்ளது ராயல் என்ஃபீல்ட் நிறுவனம். மேலும் இந்த மாடலில் முதன் முதலாக மானோ ஷாக் எனும் ஒற்றை சஷ்பென்சனை பொருத்தியுள்ளது. அனைத்திற்கும் மேலாக ராயல் என்ஃபீல்ட் பைக்குகளில் வரும் சத்தம் இதில் வராது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த மாடல் வெள்ளை மற்றும் கருப்பு என இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்.

இந்த மாடலில் 411cc ,கொண்ட புத்தம் புதிய என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 24.5 Bhp திறனையும் 32 Nm  இழுவைதிறனையும் வழங்கும். என்ஜினும் நீண்ட தூர  பயணத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பாக 10000 கிலோமீட்டருக்கு ஒரு முறை என்ஜின் ஆயில் மாற்றினால் போதும்.

 இந்த மாடலின் இருக்கை 800 மில்லி மீட்டர் உயரம் கொண்டது. எனவே உய்ரம் குறைவானவரும் எளிதாக அமர முடியும். அதே சமயம் தரை இடைவெளியும் கரடுமுரடான சாலைகளில் செல்ல ஏற்ற அளவு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் வடிவமைப்பிற்காக இந்தியாவை சேர்ந்த ரேலி வீரர் CS.சந்தோஸ் அவரிடம் இருந்து  நிறய கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் அவரை வைத்து சோதனை ஓட்டங்களையும் செய்துள்ளது. எனவே ஒரு சிறந்த ஆஃப் மற்றும் டூரர் மாடலாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.