2018 டெல்லி வாகன கண்காட்சி: அறிமுகப்படுத்தப்பட்டது புத்தம் புதிய டாடா 45X பிரீமியம் ஹேட்ச் கான்செப்ட்

டாடா நிறுவனம் புத்தம் புதிய 45X பிரீமியம் ஹேட்ச் கான்செப்ட் மாடலை முதல் முறையாக 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா நிறுவனம்  H5X எனும் SUV கான்செப்ட் மாடலையும் வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. டாடா நிறுவனம் இந்த மாடல் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. எனினும், இந்த மாடல் அடுத்த வருட இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடல் டாடா வின் மேம்படுத்தப்பட்ட இம்பேக்ட் 2.0 எனும் டிசைன் தத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே இம்பேக்ட் 2.0 டிசைன் தத்பரியத்தில் தான் H5X SUV கான்செப்ட் மாடலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. டாடா 45X கான்செப்ட் மாடல் வெளிப்புறத்தில் ஒரு பிரீமியம் மாடல் போன்ற தோற்றத்தை தருகிறது. 

டாடா நிறுவனம் உட்புறம் மற்றும் எஞ்சின் தொடர்பான விவரங்களை வெளியிடவில்லை. இந்த மாடல் வெளியிடப்படும் போது பிரீமியம் ஹேட்ச் செக்மென்ட்டில் மாருதி சுசூகி பலேனோ, ஹோண்டா ஜாஸ் மற்றும் வோல்க்ஸ்வேகன் போலோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.