செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியிடப்படும் 2018 ஆம் ஆண்டு ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்
அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டு ஈக்கோஸ்போர்ட் மாடலை செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியிடும் என தெரிகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் ஏற்கனவே சென்னை ஆலையில் இருந்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
முன்புறத்தில் போர்டு நிறுவனத்தின் புதிய மற்றும் பெரிய க்ரில் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் சில ஒப்பனை மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. பக்கவாட்டுப்பகுதி மற்றும் பின்புறத்தில் அதிக மாற்றங்கள் இல்லை. குறிப்பாக பின்புறத்தில் உள்ள ஸ்பேர் வீலை நீக்கியுள்ளது போர்டு நிறுவனம். உட்புறம் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. புதிய டச் ஸ்க்ரீன் சிஸ்டம், புதிய சென்டர் கன்சோல் மற்றும் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் என முழுவதுமாக மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய மாடலில் பின்புற ஸ்பேர் வீலும் மற்றும் உட்புறமும் அதிக மாற்றம் பெற்றிருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எஞ்சினில் மாற்றம் இருக்காது அதே 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 1 லிட்டர் ஈகோபூஸ்ட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என மூன்று என்ஜினில் தான் கிடைக்கும். இது தற்போது சந்தையில் இருக்கும் மற்ற மாடல்களுடன் போட்டி போட சற்று உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.