மேம்படுத்தப்பட்ட புதிய காம்பஸ் மாடலை வெளிப்படுத்தியது ஜீப்

ஜீப் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புத்தம் புதிய காம்பஸ் மாடலை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியது. இதன் சோதனை ஓட்ட படங்கள் கடந்த சில மாதங்களாகவே  நிறைய இணையத்தில் உலா வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோற்றத்தில் இந்த மாடல் பார்ப்பதற்கு சிறிய கிராண்ட் செரோக்கீ போல இருக்கிறது. கிராண்ட் செரோக்கீ மற்றும் ரெனெகெட் மாடலின் வடிவங்கள் அதிகமாக இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. உட்புறத்திலும் கிராண்ட் செரோக்கீ மாடலின் வடிவங்களே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த மாடல் சிறப்பான SUV  போன்ற தோற்றத்தை தருகிறது.

நிறைய விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் நாடுகளுக்கு ஏற்றவாறு இந்த மாடல் கிடைக்கும். இந்தியாவில் இந்த மாடல் 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வெளியிடப்படலாம். மேலும் இந்த மாடல் தோராயமாக ரூ.25 லட்சம் விலை கொண்டதாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.