ரூ 9.47 லட்சம் விலையில் இறுதியாக வெளியிடப்பட்டது புதிய மஹிந்திரா TUV300 பிளஸ்

இறுதியாக மஹிந்திரா நிறுவனம் புதிய TUV300 பிளஸ் மாடலை ரூ 9.47 லட்சம் மும்பை ஷோரூம் ஆரம்ப விலையில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனம் TUV300 மாடலின் அதிக வீல் பேஸ் கொண்ட மாடலை நீண்ட நாட்களாகவே சோதனை செய்து வருகிறது. இந்த மாடலை TUV300 பிளஸ் என்ற பெயரில் வெளியிட இருப்பதும் அனைவரும் அறிந்ததே. மேலும் இதன் சோதனை ஒட்டப்படங்களும் அடிக்கடி வெளியாகி வந்ததும், இந்த புதிய TUV300 பிளஸ் மாடல் பெரும்பாலான மஹிந்திரா ஷோரூம்களில் ஏற்கனவே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் P4, P6 மற்றும் P8 என மூன்று வேரியன்ட்டுகளில் வெளியிடப்பட்டுள்ளது. 

இதன் உட்புற மற்றும் வெளிப்புற வடிவமைப்பு அப்படியே TUV300 மாடல் போலவே உள்ளது. ஆனால் இதன் நீளம் தான் அதிகம். அதேபோல் இதன் பின்புறமும் TUV300 மாடலை விட அதிக சரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் தோல் இருக்கை, டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், காற்றுப்பை, ABS, EBD என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் ஸ்கார்பியோ மற்றும் XUV500 மாடலில் உள்ள அதே 2.2 லிட்டர் mHawk எஞ்சின் தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த எஞ்சின் 120Bhp திறனையும் 280Nm இழுவைத்திறனையும் மட்டுமே வழங்கும். மேலும் இந்த மாடலில் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ஒன்பது பேர் வரை அமரும் இருக்கை அமைப்பு கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.