ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் வெளியிடப்படும் ஜீப் மாடல்கள்

இறுதியாக ஃபியட்  நிறுவனம் ஜீப் மாடல்கள் இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படும் என உறுதிப்படுத்தியுள்ளது. 2012 ஆம் ஆண்டே ஃபியட்  நிறுவனம் வெளி நாட்டு பிராண்டுகள் இந்தியாவில் வெளியிடப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி சில மாதங்களுக்கு  முன்பு தான் அபாரத் பிரண்டை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஜீப் பிராண்டும் இந்தியாவில் மீண்டும் வெளியிடப்படும் என அறிவித்திருந்தது. அதேபோல் 2016 டெல்லி வாகன கண்காட்சியில் செரோக்கி மற்றும்  வ்ரேங்க்ளர்  காட்சிப்படுதியதுடன் இந்த ஆண்டு மத்தியில் இந்த இரண்டு மாடல்களும் வெளியிடப்படும் என அறிவித்தது.

பியட் நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே அபார்த், மசராட்டி மற்றும் பெர்ராரி பிராண்டுகளை விற்பனை செய்து வருகிறது. தற்போது ஜீப் பிராண்டும் அதில் இனைய உள்ளது. ஜீப் நிறுவனம் உலக அளவில் SUV  மற்றும் ஆப் ரோடு வாகனங்களை தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனம். ஜீப் மாடல்கள் முன்பு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்ககது. 

பல மாதங்களுக்கு முன்பே  இந்தியாவிற்கான பிரத்தியேக இணையதளம், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலை தளங்களிலும் பக்கங்கள் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் ஃபியட்  நிறுவனம் ஜீப் ரெனெகேட் மாடலை இந்தியாவில் சோதனை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.