மீண்டும் வருகிறது ஜீப்: இந்தியாவிற்கான பிரத்தியேக இணையதளம் வெளியீடு

பியட் நிறுவனம் ஏற்கனவே ஜீப் பிரண்டை இந்தியாவில் மீண்டும் வெளியிடப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி தற்போது இந்தியாவிற்கான பிரத்தியேக இணையதளம் வெளியிடப்பட்டுள்ளது. பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலை தளங்களிலும் பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் க்ராண்ட் செரோக்கி மற்றும் வ்ராங்க்ளர் மாடல்களின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜீப் கம்பெனி தொடர்பான வரலாற்று செய்திகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

பியட் நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே அபார்த், மசராட்டி மற்றும் பெர்ராரி பிராண்டுகளை விற்பனை செய்து வருகிறது. தற்போது ஜீப் பிராண்டும் அதில் இனைய உள்ளது. ஜீப் நிறுவனம் உலக அளவில் SUV  மற்றும் ஆப் ரோடு வாகனங்களை தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனம். ஜீப் மாடல்கள் முன்பு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்ககது. 

2016 ஆம் ஆண்டு டெல்லியில் நடக்கும் வாகன கண்காட்சியில் இந்தியாவில் வெளியிடப்படும் மாடல்கள் மற்றும் வெளியிடப்படும் தேதி குறித்த பிற தகவல்களும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.