மஹிந்திரா S201 தயாரிப்பு நிலை மாடலின் சோதனை ஓட்ட படங்கள் கசிந்தது

மஹிந்திரா நிறுவனம் சாங்யாங் டிவோலி மாடலை மஹிந்திரா பிராண்டில் இந்தியாவில் வெளியிட உள்ளது அனைவரும் அறிந்தது, மேலும் அந்த மாடலை S201 குறியீட்டு பெயரில் மஹிந்திரா நிறுவனம் சோதனை செய்து வருகிறது. இதன் தயாரிப்பு நிலை மாடலின் சோதனை ஓட்ட படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இந்த மாடல் இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மஹிந்திரா நிறுவனம் சாங் யாங் ரெக்ஸ்டன் மாடலின் ரீபேட்ச் செய்யப்பட்ட மஹிந்திரா ரெக்ஸ்டன் மாடலை நவம்பர் 19 ஆம் தேதி இந்தியாவில் வெளியிட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மஹிந்திரா நிறுவனம் TUV300 மற்றும் நுவோ ஸ்போர்ட் மாடல்களை அடுத்து வெளியிடும் மூன்றாவது நான்கு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட SUV மாடல் ஆகும். இந்த மாடல் ஒரு சிறப்பான SUV போன்ற தோற்றத்தை தருகிறது. மேலும் இந்த மாடலில் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், ABS மற்றும் EBD என ஏராளமான வசதிகளுடன் இந்த மாடல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாடல் மராஸோ மாடலில் உள்ள புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் 121bhp திறனையும் மற்றும் 300Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் மாருதி சுசூகி விட்டாரா ப்ரீஸா, போர்டு ஈகோ ஸ்போர்ட், ஹோண்டா WR-V மற்றும் டாடா நெக்ஸன் போன்ற நான்கு மீட்டருக்கும் குறைவான SUV மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.