அடுத்த தலைமுறை மாருதி சுசூகி டிசைர் மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது

மாருதி சுசூகி நிறுவனம் அடுத்த தலைமுறை டிசைர் மாடலின் முன்பதிவை தொடங்கியது. இந்த மாடலை ரூ 11,000  முன்பணமாக செலுத்தி அனைத்து டீலர்ஷிப்புகளிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த மாடல் இந்தியாவில் மே 16 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த மாடல் முற்றிலும் புதிய பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதே பிளாட்போர்மில் தான் அடுத்த தலைமுறை ஸ்விப்ட் மாடலும் பலேனோ மாடலும் தயாரிக்கப்படுகிறது. இதன் ஹேட்ச் வெர்சனான ஸ்விப்ட் மாடல் ஜப்பானில் ஏற்கனவே விற்பனையில் உள்ளது கடந்த ஜனவரி மாதம் தான் விற்பனை தொடங்கப்பட்டது.

முன்புறத்தில் புதிய அருங்கோன வடிவ கிரில், புதிய முகப்பு விளக்குகள், புதிய பனி விளக்கு அறை மற்றும் பின்புறத்தில் புதிய பின்புற விளக்குகள் என முற்றிலும் புதிய தோற்றத்தை தருகிறது. மேலும் பக்கவாட்டு கோடுகளும் சிறிது மாற்றப்பட்டுள்ளது.  உட்புறம் டேஸ் போர்டு, ஸ்டீரிங் வீல் என முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மாடலில் புதிய அடிப்புறம் தட்டையான ஸ்டேரிங் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு முந்தய மாடல் போல் தோற்றமளித்தாலும் இந்த மாடலும் முற்றிலும் புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த மாடல் 1.2 லிட்டர் K-சீரீஸ் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 லிட்டர் DDiS  டீசல் எஞ்சினில் கிடைக்கும். மேலும் இந்த இரண்டு எஞ்சினும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும். மேலும் இந்த மாடல் 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் எஞ்சினிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் L, V, Z and Z+. ஆகிய வெறியண்டுகளில் கிடைக்கும். இந்த மாடல் ஹூண்டாய் எக்ஸென்ட், ஹோண்டா அமேஸ், வோல்க்ஸ்வேகன் அமியோ, டாடா டிகோர், டாடா செஸ்ட் மற்றும் போர்டு ஆஸ்பயர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.