டாடாவின் புதிய பிரீமியம் ஹேட்ச் மாடலின் சோதனை ஓட்டப் படங்கள் கசிந்தது

டாடா நிறுவனம் தயாரித்து வரும் புதிய பிரீமியம் ஹேட்ச் மாடலின் சோதனை ஓட்டப் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. டாடா நிறுவனம் X451 எனும் குறியீட்டுப் பெயரில் இந்த மாடலை தயாரித்து வருகிறது. மேலும் இந்த மாடல் டாடா நிறுவனத்தின் AMP (Advanced Modular Platform) பிளாட் பார்மில் தயாரிக்கப்படும் முதல் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே டாடா நிறுவனம் AMP பிளாட் பார்மில் SUV, ஹேட்ச் மற்றும் செடான் என அனைத்து விதமான மாடல்களையும் தயாரிக்க முடியும் எனவும் முதல் மாடலாக ஒரு ஹேட்ச் மாடல் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்படும் எனவும் அறிவித்திருந்தது. எனவே இந்த மாடல் அடுத்த வருடம் டெல்லியில் நடைபெறும் வாகன கண்காட்சியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் சமீபத்தில் வெளியிடப்பட்ட நெக்ஸன் மாடலை போல 1.2 லிட்டர் ரேவோட்ரான் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ரேவோ டார்க் டீசல் எஞ்சின்களில் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் மாருதி சுசூகி பலேனோ, ஹூண்டாய் எலைட் i20 மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும். 

Source: Autocarindia

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.