அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டது ஸ்கோடா கோடியாக் SUV

ஸ்கோடா நிறுவனம் அதிகாரபூர்வமாக கோடியாக் SUV மாடலை பெர்லினில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியது. இதன் கான்செப்ட் மாடல் 2016 ஆம் ஆண்டு ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது விசன் S கான்செப்டின் தயாரிப்பு நிலை மாடல் ஆகும். அலாஸ்காவில் வாழும் கோடியாக் எனும் கரடியின் பெயரிலிருந்தும் மேலும் கோடியாக் எனும் தீவின் பெயரிலிருந்தும் இப்பெயர் பெறப்பட்டுள்ளதாக ஸ்கோடா நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

முகப்பு கிரில் மற்றும் வடிவமைப்பு என ஸ்கோடா மாடலின் பாரம்பரிய டிசைன் தத்பரியத்தில் அடுத்த தலைமுறைக்கு ஏற்ற அம்சங்களை புகுத்தி இந்த மாடலை வடிவமைத்துள்ளது ஸ்கோடா நிறுவனம். இது பார்பதற்கு முழுமையான மற்றும் பெரிய SUV போல் தோற்றத்தை தருகிறது. இந்த மாடல் ஸ்கோடா எட்டி மாடலை விட பெரியதாக இருக்கும். இந்த மாடல் மூன்று விதமான பெட்ரோல் என்ஜினிலும் மற்றும் இரண்டு விதமான  டீஸல் என்ஜினிலும் கிடைக்கும். மேலும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவையும் இந்த மாடலில் கிடைக்கும்.

உட்புறத்தில் சூப்பர்ப் மாடலின் சில பாகங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இந்த மாடல் அனைத்து விதமான சொகுசு உபகரணங்களும் கொண்ட மாடலாக இது இருக்கும். மேலும் இந்த மாடல் 5 மற்றும் 7 பேர் அமரக்கூடிய இருக்கை கொண்டதாகவும் கிடைக்கும். இந்த மாடல் 2017 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.