மிகப்பெரிய இலவச பரிசோதனை முகாமை நடத்தும் டாடா

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நவம்பர் மாதம் 20 முதல் 26 வரை மிகப்பெரிய இலவச பரிசோதனை முகாமை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த முகாம் நாடு முழுதும் உள்ள 287 நகரங்களில் நடக்க இருக்கிறது. டாடா ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டர் மட்டுமல்லாமல் இந்தியன் ஆயில் நிறுவனதுடன் இணைந்து அதன் எரிபொருள் நிரப்பும் மையங்களிலும் நடக்கும்.

இந்த இலவச பரிசோதனை முகாமில் கார் வாஷ், முழுமையான பரிசோதனை ஆகியவை செய்து தரப்படும். மேலும் டாடா நிறுவன உதிரிப் பாகங்களுக்கு 10 சதவீதம் வரையும் அத்ந் துணை நிறுவன உதிரிப் பாகங்களுக்கு 20 சதவீதம் வரையும் தள்ளுபடி கிடைக்கும்.

இந்த முகாம் டாடா நிறுவனத்தால் இந்த வருடத்தில் நடத்தப்படும் மூன்றாவது முகாம் ஆகும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.