மீண்டும் கார்களின் விலையை ரூ 25,000 வரை உயர்த்தும் டாடா

டாடா நிறுவனம் மீண்டும் கார்களின் விலையை ரூ 25,000 வரை உயர்த்த உள்ளது, வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இந்த விலை ஏற்றம் அமலுக்கு வரும் என டாடா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அதிகரித்துள்ளது. டாடா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் தான் கார்களின் விலையை கணிசமாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. 

உற்பத்தி பொருள்களின் விலை அதிகரிப்பு மற்றும் பொருளாதார மாற்றம் ஆகியவற்றால் இந்த விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது என டாடா நிறுவனத்தின் பயணிகள் வாகன பிரிவின் தலைவர் மயாங்க் பரீக்  வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். டாடா நிறுவனம் ஹாரியர், நெக்ஸன், டியாகோ, டிகோர், ஹெக்சா, செஸ்ட், போல்ட், சஃபாரி ஸ்டார்ம், நானோ மற்றும் சுமோ என பத்து வகையான பயணிகள் வாகனங்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.