சென்னையை தொடர்ந்து கோழிகோடில் டீலர்சிப்பை தொடங்கியது மெர்சிடிஸ் பென்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் மூன்று உலகத்தரம் வாய்ந்த ஷோரூம்களை சென்னையில் நேற்று  தொடங்கியது. டைட்டானியம் மோட்டார் நிறுவனம் இந்த மூன்று ஷோரூம்களையும் தொடங்கியது.  துரைப்பாக்கம், பெருங்குடி மற்றும் அண்ணா சாலை ஆகிய மூன்று  இடங்களில் தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று கேரளாவில் உள்ள கோழிகோடில் ஒரு டீலர்சிப்பை மெர்சிடிஸ் பென்ஸ நிறுவனம் தொடங்கியது. 

பிரிட்ஜ்வே மோட்டார் நிறுவனம் இந்த டீலர்சிப்பை தொடங்கியுள்ளது. இந்த ஷோ ரூம் 28000 சதுர அடி கொண்டது. இந்த ஆண்டு இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட 11 வது ஷோ ரூம் ஆகும். 15 in 15 என்ற கொள்கையின் அடிப்படையில் இன்னும் 4 ஷோ ரூம்களை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.