ஆகஸ்ட் 1 முதல் கார் விலையை உயர்த்துகிறது ஹுண்டாய் நிறுவனம்

உற்பத்தி செலவீனம் மற்றும் உதிரி பாகங்களின் விலை உயர்வால் ஹுண்டாய் நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்துகிறது. ரூபாய் 30000 வரை விலை உயர்த்தப்படும் என தெரிகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட க்ரெடா காரின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விலை உயர்வு வாடிக்கையாளர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தினாலும் அதை மற்ற சலுகைகள் மூலம் இதை ஈடுகட்ட முடியும் என ஹுண்டாய் நிறுவனம் நம்புகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.