நவம்பர் 7 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட புதிய டொயோடா - ஃபார்சுனர்

டொயோடா நிறுவனம் இறுதியாக தனது மேம்படுத்தப்பட்ட புதிய  ஃபார்சுனர் SUV  மாடலை நவம்பர் 7 ஆம் தேதி வெளியிட உள்ளது. டொயோடா நிறுவனம் நீண்ட காலமாகவே ஃபார்சுனர் SUV  மாடலை இந்தியாவில் சோதனை செய்து வந்தது. தற்போது எண்டவர் மற்றும் ட்ரைல்பிளேசர் போன்ற மாடல்களின் போட்டியால் ஃபார்சுனர் SUV  மாடலை வெளியிட திட்டமிட்டுள்ளது.

முன்புற கிரில், பின்புற விளக்குகள், பக்கவாட்டு வடிவமைப்பு  என வெளிப்புறத்தில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பக்கவாட்டில் இருந்து பார்க்கும் பொது LC ப்ராடோ போன்ற தோற்றமளிக்கிறது. பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள் என அதிக உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.   உட்புறம் முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது. உட்புறம் கருப்பு மற்றும் சில்வர் வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காற்றுப்பை, தானியங்கி குளிரூட்டி, முகப்பு விளக்குகள், ஆன்டி லாக் ப்ரேக் என அனைத்து உபகரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் இன்னோவா க்ரிஸ்ட்டா மாடலில் உள்ள  2.4 லிட்டர் & 2.8 லிட்டர்  டீசல் என்ஜினில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2.4 லிட்டர் என்ஜின் 150 bhp (3400 rpm) திறனும் 343Nm (1400-2500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.  2.8 லிட்டர் என்ஜின் 174 bhp (3400 rpm) திறனும் 360Nm (1200-3400rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த இரண்டு என்ஜினுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும்.  பெட்ரோல் எஞ்சினுடன் வெளியிடப்படுமா என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.