ஜீப் காம்பஸ் மாடலின் முன்பதிவு ஜூன் 20 தேதி முதல் தொடங்கப்படும்

ஜீப் நிறுவனம் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட புத்தம் புதிய காம்பஸ் மாடலின் முன்பதிவை  ஜூன் 20 தேதி முதல் தொடங்குகிறது. ரூ 50,000 முன்பணமாக செலுத்தி இந்த மாடலை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த மாடல் முதலில் கடந்த ஆண்டு பிரேசிலில் வெளியிடப்பட்டது. இந்த மாடல் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இது தான் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் முதல் ஜீப் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடல் இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

தோற்றத்தில் இந்த மாடல் பார்ப்பதற்கு சிறிய கிராண்ட் செரோக்கீ போல இருக்கிறது. கிராண்ட் செரோக்கீ மற்றும் ரெனெகெட் மாடலின் வடிவங்கள் அதிகமாக இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. உட்புறத்திலும் கிராண்ட் செரோக்கீ மாடலின் வடிவங்களே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த மாடல் சிறப்பான SUV  போன்ற தோற்றத்தை தருகிறது.

இந்தியாவில் இந்த மாடல் 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின் 162Bhp திறனையும் 250Nm இழுவைத்திறனையும் வழங்கும். மற்றும் இதன் டீசல் என்ஜின் 170Bhp திறனையும் 350Nm இழுவைத்திறனையும் வழங்கும்.  இந்த மாடல் ஆறு ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏழு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்சில் கிடைக்கும். மேலும் இந்த மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் ஆப்ஷனாக கிடைக்கும். இத்துடன் ஆட்டோ, ஸ்னோ, சேன்ட் மற்றும் மட் என நான்கு டிரைவிங் மோடுகளும் கொடுக்கப்பட்டிருக்கும்.

இந்த மாடல் 178mm தரை இடைவெளி கொண்டது. இந்த மாடலில் ஐந்து பேர் வரை பயணிக்க முடியும். மேலும் இந்த மாடலில் ஆறு காற்றுப்பை, ABS, EBD, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் என ஏராளமான வசதிகள் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் உற்பத்தி ஜூன் மாதம் தொடங்கப்பட உள்ளது. அதை தொடந்து இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்படும். மேலும்  இந்த மாடல் தோராயமாக ரூ.25 லட்சம் விலை கொண்டதாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.