மேம்படுத்தப்பட்ட டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் மாடல்களின் முன்பதிவு தொடங்கப்பட்டது

டட்சன் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய கோ மற்றும் கோ பிளஸ் மாடல்களை இந்த மாதம் வெளியிட உள்ளது. அதற்கு முன்னர் மேம்படுத்தப்பட்ட புதிய கோ மற்றும் கோ பிளஸ் மாடல்களின் முன்பதிவை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. ரூ 11,000 முன்பணமாக செலுத்தி இந்த மாடல்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த மாடல்களில் ஒப்பனை மாற்றமும் சில கூடுதல் உபகரணங்களும் கொடுக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாடலின் வெளிப்புறத்தில் சில ஒப்பனை மாற்றங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் உட்புறம் தொடர்பான படங்கள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முந்தய மாடலை விட கூடுதல் உபகரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது. 

எஞ்சினில் எந்த மாற்றமும் இருக்காது, அதே அதே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் தான் கிடைக்கும். இந்த எஞ்சின் 68bhp (6000 rpm) திறனும்104Nm (4000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த திறன் ஐந்து ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் மூலம் வீலுக்கு கடத்தப்படுகிறது. டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் மாடல்கள் முந்தய வண்ணங்களுடன் கூடுதலாக முறையே ஆரஞ்சு மற்றும் பிரவுன் வானங்களிலும் கிடைக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.