BR-V மாடலை வெளியிடுவதற்கான முன்னேற்பாட்டு வேலைகளை தொடங்கியது ஹோண்டா

ஹோண்டா நிறுவனம் BR-V, மாடலை வெளியிடுவதற்கான முன்னேற்பாட்டு வேலைகளை தொடங்கியது. BR-V மாடலை விளம்பரப்படுத்தவும் காட்சிப்படுத்தவும்  அடுத்த 20 நாட்கள் இந்த காரை முக்கிய நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ள வைக்கிறது ஹோண்டா  நிறுவனம். இந்த மாடல் அடுத்த மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாடல் ப்ரியோ மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறம் பெரிய குரோம் கிரில், பனி விளக்குகள், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், மற்றும் பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறம் பார்பதற்கு CR-V போல் தோற்றமளிக்கிறது. பக்கவாட்டில் ப்ரியோ, அமேஸ் மற்றும் மொபிலியோ போன்ற மாடலில் உள்ள அதே வடிவமைப்பு இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில் LED விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் 7 பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்பு கொண்டதாக இருக்கும். இந்த மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் கிடைக்கும். இதன்  பெட்ரோல் என்ஜின் 119 bhp (6600 rpm) திறனும் 145Nm (4600rpm) டார்க் எனும்  இழுவைதிறனும், டீசல் என்ஜின்  மாடல் 100 bhp (3600 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.   

இந்த மாடல் ஹுண்டாய் க்ரெட, மற்றும் ரெனால்ட் டஸ்டர் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த மாடல்  ரூ.10 முதல் 13லட்சம் விலை கொண்டதாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.