நாளை இந்தியாவில் வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் கிராண்ட் i10

ஹூண்டாய் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட கிராண்ட் i10 மாடலை நாளை இந்தியாவில் வெளியிட உள்ளது.  இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் அதிகாரப்பூர்வமாக 2016 ஆம் ஆண்டு பாரிஸ் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த புதிய கிராண்ட் i10 மாடலில் மற்ற இடங்களை விட முன்புறத்தில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. புதிய க்ரில் அமைப்பு இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த க்ரில் அமைப்பு தான் இனி வரும் அனைத்து ஹூண்டாய் கார்களிலும்  இருக்கும். மேலும் முன்புறத்தில் வட்ட வடிவ பகல் நேரத்தில் ஒளிரும் LED  விளக்குகள் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் சிறிய மற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. உட்புறத்திலும் பெரிய மாற்றங்கள் இல்லை. புதிய சிவப்பு மற்றும் கருப்பு வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் புதிய 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் இந்த மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 1.0 லிட்டர் LPG என்ஜின் மற்றும் 1.1 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகியவற்றில் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது நாளை வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட மாடல் 1.1 லிட்டர் டீசல் என்ஜினுக்கு பதிலாக புதிய 1.2 லிட்டர் டீசல் எஞ்சினிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.