ரூ.68.4 லட்சம் ஆரம்ப விலையில் அக்டோபர் 20 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படுகிறது ஜாகுவார் F-பேஸ் SUV

இறுதியாக ஜாகுவார் நிறுவனம் அக்டோபர் 20 ஆம் தேதி  இந்தியாவில் F-பேஸ் SUV மாடலை வெளியிடப்படும்  என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த மாடல் ரூ.68.4 லட்சம் ஆரம்ப விலையிலும் ரூ1.12 கோடி அதிகபட்ச விலையிலும் கிடைக்கும். இதன் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதன் கான்செப்ட் மாடல் மூன்று வருடங்களுக்கு முன்னால் வெளியிடப்பட்டது என்பது  குறிப்பிடத்தக்கது.

இந்த மாடல் 2.0 லிட்டர் டீசல், பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் என்ஜினில் இரண்டு விதமான திறன் என நன்கு விதமான என்ஜின் ஆப்சன்களில் உலகளவில் கிடைக்கிறது. இதன் அனைத்து மாடல்களும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தில் கிடைக்கும். இதன் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் 180 bhp  திறனையும், 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 240 bhp  திறனையும், 3.0 லிட்டர் டீசல் என்ஜின் 340 bhp  திறனையும் மற்றும் 380 bhp  திறனையும் வழங்கும். அனால் இந்தியாவில் 2.0 லிட்டர் மற்றும் 3.0 லிட்டர்  டீசல் எஞ்சின் மாடல் மட்டுமே வெளியிடப்பட உள்ளது.

இந்த மாடல் இலகு எடை கொண்ட அலுமினியத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால் மிக சிறப்பான கையாளுமையையும், சொகுசான பயண அனுபவத்தையும் தரும் என ஜகுவார் நிறுவனம் கூறியுள்ளது. இந்த மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளதால் கரடு முரடான சாலைகளிலும் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும் எனவும் கூறியுள்ளது. இந்த மாடல் வெளிவந்த பிறகு SUV மாடல்களிலேயே இதுதான் சிறப்பான பயண அனுபவத்தை தரும் மாடலாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.