கேப்டர் அடிப்படையிலான புதிய SUV யை இந்தியாவில் வெளியிடும் ரெனால்ட்

ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில்  கேப்டர் மாடலின் அடிப்படையில் ஒரு புதிய SUV  மாடலை வெளியிட இருக்கிறது. இதன் டீசர் படத்தை சில நாட்களுக்கு முன்பு தான் ரெனால்ட் நிறுவனம் வெளியிட்டது. இந்த மாடல் முதலில் ரஸ்யாவில வெளியிடப்படும் பிறகு இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாடல் அப்படியே இந்தியாவில் வெளியிடப்பட மாட்டாது. கேப்டர் மடலின் வடிவத்தை மட்டும் அப்படியே பயன் படுத்தி டஸ்டர் மாடலின் அடிப்படையில் இந்தியாவுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்படும். ஏனெனில் இந்தியாவில் டஸ்டர் மாடல் விற்பனை செய்யப்படுவதால் அதன் அடிப்படையில் உருவாக்கும் போது உற்பத்தி செலவீனம் வெகுவாக குறையும். இந்த மாடலில் டஸ்டர் மாடலில் உள்ள அதே என்ஜின் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் ஏழு இருக்கை கொண்டதாக இருக்கும்.

இந்த மாடல் டஸ்டர் மாடலுக்கு  மேலாக நிலைநிறுத்தப்படும்.  மேலும் இந்த மாடலை மகிந்திரா XUV500 மாடலுக்கு போட்டியாக நிலைநிறுத்தவும் திட்டமிட்டுள்ளது ரெனால்ட்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.