2016 பாரிஸ் மோட்டார் கண்காட்சியில் வெளிப்படுத்தப்படும் அடுத்த தலைமுறை சாங் யாங் ரெக்ஸ்டன்

சாங் யாங் நிறுவனம் அடுத்த தலைமுறை ரெக்ஸ்டன் மாடலை 2016 ஆம் ஆண்டு பாரிஸ் மோட்டார் கண்காட்சியில் வெளிப்படுத்த இருக்கிறது. இந்த மாடலின் கட்டமைப்பு அதிக உறுதித்தன்மை கொண்டதாகவும் 50 கிலோ கிராம் வரை குறைவான எடை கொண்டதாகவும் இருக்கும். இந்த மாடல் அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட மாடலாகவும் சிறந்த ஏரோ டைனமிக் கொண்டதாகவும் இருக்கும். 

இந்த அடுத்த தலைமுறை சாங் யாங் ரெக்ஸ்டன் மாடலிலும் அதே 2.2 லிட்டர் டீசல் என்ஜின் தான் பொருத்தப்பட்டிருக்கும். இது 178 Bhp  திறனை வழங்கும். மேலும் இந்த மாடல் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடனும் கிடைக்கும். 

உட்புறமும் முற்றிலும் புதிதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம், காற்றுப்பை என ஏராளமான வசதிகள் கொண்டதாகவும் இருக்கும். இந்த மாடல் தொடர்பான மேலும் விவரங்களை 2016 பாரிஸ் மோட்டார் கண்காட்சியில் தெரிந்து கொள்ளலாம்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.