மார்ச் 29 ஆம் தேதி வெளியிடப்படும் டாடா டிகோர்

டாடா நிறுவனம் டியாகோ மாடலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட  டிகோர் காம்பேக்ட் செடான் மாடலை மார்ச் 29 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது. டாடா நிறுவனம் கைட்5 கான்செப்ட் மாடலின் பெயரை டிகோர் என சில நாட்களுக்கு முன்பு தான் அறிவித்தது. இந்த காம்பேக்ட் செடான் மாடலை 2016 டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. இது டாடா நிறுவத்தின் மூன்றாவது காம்பேக்ட் செடான் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

டியாகோ மாடலை அப்படியே பின்புறத்தை மட்டும் மாற்றி செடான் மாடலாக வடிவமைத்துள்ளது. இருப்பினும் பின்புற வடிவத்தை மிகவும் சிறப்பாகவே வடிவமைத்துள்ளது டாடா நிறுவனம். 

இந்த மாடல் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜினில் கிடைக்கும். இதன் 1.0 லிட்டர் என்ஜின் டாடா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட புதிய எஞ்சின் என்பது குறிப்பிடத்தக்கது.  இதன் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் 85 Bhp திறனையும் 114 Nm இலுவைதிரனையும் வழங்கும். இதன் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் 70 Bhp திறனையும் 140 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் ரூ. 4.5 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.