மஹிந்திரா ஜாவா

இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான மகிந்திரா பிரிட்டனை சேர்ந்த கிளாசிக் மோட்டார் பைக் நிறுவனமான BSA பிரண்டை கையகப்படுத்தியது அனைவரும் அறிந்ததே. மேலும் BSA பிராண்டை கையகப்படுத்தியது மட்டுமில்லாமல் ஜாவா பைக்கை மீண்டும் இந்தியா மற்றும் ஒருசில ஆசிய நாடுகளில் வெளியிடும் உரிமத்தையும் பெற்றுள்ளது மஹிந்திரா நிறுவனம். எனவே விரைவில் இந்திய சாலைகளில் BSA மற்றும் ஜாவா பைக்குகளை காண முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் ஜாவா பைக் மாடல்கள் மோஜோ மாடலில் உள்ள 300cc எஞ்சினுடன் வெளியிடப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த எஞ்சினின் செயல்திறன் ஒரு கிளாசிக் மோட்டார் பைக்கிற்கு ஏற்றதாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் நேரடியாக BSVI மாசுக்கட்டுப்பாட்டில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மகிந்திரா நிறுவனம் கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள், கார்கள்,SUV  கள், பைக்குகள், ஸ்கூட்டர்கள் என அனைத்து விதமான செக்மென்டையும் கொண்டுள்ள ஒரு மிகப்பெரிய இந்திய நிறுவனம். மகிந்திரா தனது தொழில் வளர்ச்சியை பெருக்கவும் உலகம் முழுவது தனது பிரண்டை விரிவுபடுத்தவும் ஏற்கனவே கொரியாவை சேர்ந்த சாங் யாங், பிரான்சை சேர்ந்த பியாஜியோட் மற்றும் பினின்பரினா டிசைன் நிறுவனங்களை கையகப்படுத்தியுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.