மஹிந்திரா ரெக்ஸ்டன்

மஹிந்திரா நிறுவனம் சாங் யாங் ரெக்ஸ்டன் மாடலின் ரீபேட்ச் செய்யப்பட்ட மஹிந்திரா ரெக்ஸ்டன் மாடலை 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. சாங் யாங் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ரெக்ஸ்டன் மாடலுக்கும் இதற்கும் எந்த மாற்றமும் இல்லை, அதே மாடல் மஹிந்திரா நிறுவன பேட்சில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மாடல் வெளியிடப்பட்டால் மஹிந்திரா நிறுவனத்தின் அதிக விலை கொண்ட மாடலாக இருக்கும். 

இந்த மாடலும் மற்ற மஹிந்திரா மாடல்கள் போலவே பாடி-ஆன்-பிரேம் எனும் முறையில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. முந்தய மாடலுடன் ஒப்பிடும் போது இந்த மாடலின் கட்டமைப்பு அதிக உறுதித்தன்மை கொண்டதாகவும் 50 கிலோ கிராம் வரை குறைவான எடை கொண்டதாகவும் இருக்கும். இந்த மாடல் அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட மாடலாகவும் சிறந்த ஏரோ டைனமிக் கொண்டதாகவும் இருக்கும். இந்த மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 178 Bhp திறனும் 420Nm இழுவைத்திறனும் கொண்டது. மேலும் இந்த மாடல் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடனும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்சுடனும் கிடைக்கும். மேனுவல் ட்ரான்ஸ்மிஷனுடன் கிடைக்குமா என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. 

மஹிந்திரா ரெக்ஸ்டன் மாடல் இந்தியாவில் வெளியிடப்படும் போது டொயோட்டா பார்ச்சுனர் மற்றும் போர்டு எண்டவர் போன்ற பிரீமியம் சுவ மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.