என்ஜாய் மாடலின் விற்பனையை நிறுத்துகிறது செவ்ரோலேட்

செவ்ரோலேட் நிறுவனம் மிகக்குறைந்த விற்பனை காரணமாக என்ஜாய் MPV  மாடலின் விற்பனையை இந்த மாதத்துடன் நிறுத்த இருக்கிறது.  செவ்ரோலெட் என்ஜாய் மாடல் இந்திய சந்தையில் 2013 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் செவ்ரோலேட் நிறுவனம் ஸ்பின் MPV  மாடலும்   இந்தியாவில் வெளியிடப்படாது என ஏற்கனவே அறிவித்திருந்தது. 

இந்தியாவில் MPV  மாடல்களுக்கு மார்கெட் குறைந்து வருவதால் ஸ்பின் மாடலின் திட்டம் கைவிடப்பட்டதாக செவ்ரோலேட் நிறுவனம் அறிவித்திருந்தது. அதற்கு பதிலாக காம்பேக்ட் SUV  மற்றும் செடான் போன்ற மாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளாதாகவும்  அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செவ்ரோலேட் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு பீட் ஆக்டிவ் மற்றும் எஸன்டியா மாடல்களை வெளியிடப்படும்  எனவும் மேலும் இரண்டு வருடத்திற்குள் அனைத்து மாடல்களும் புதுப்பிக்கப்படும்  எனவும் ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் செவ்ரோலேட் நிறுவனம் விரைவில் மேம்படுத்தப்பட்ட  ட்ரையல்பிளேசர் மற்றும் குரூஸ் போன்ற மாடல்களையும் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.