செப்டம்பர் 23 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு - ஃபிகோ
ஃபோர்டு - ஃபிகோ ஆஸ்பயர் காம்பேக்ட் செடென் மாடலின் வெற்றியை தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலை செப்டம்பர் 23 ஆம் தேதி இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் வெளியிட இருக்கிறது. இதனு பழைய ஃபிகோ மாடலுக்கு மாற்றாக இருக்கும். பழைய ஃபிகோ மாடல் விற்பனை நிறுத்தப்படும்.
இந்த மாடல் ஃபோர்டு - ஃபிகோ ஆஸ்பயர் காம்பேக்ட் செடென் மாடலின் ஹேட்ச்பேக் மாடல் என்பதால் ஃபிகோ ஆஸ்பயர் காருக்கும் இதுக்கும் பெரிய வேறுபாடு இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாடலும் ஃபிகோ ஆஸ்பயர் போலவே 1.2 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என மூன்று என்ஜினில் கிடைக்கும். இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனில் மட்டும் கிடைக்கும்.
மேலும் இந்த மாடல் ஃபிகோ ஆஸ்பயர் மாடலில் இருந்து 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை விலை குறைவாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.