மீண்டும் இந்தியாவில் வெளியிடப்படுகிறது ஸ்கோடா ஆக்டேவியா vRS
ஸ்கோடா நிறுவனம் அதிக திறன் கொண்ட ஆக்டேவியா vRS மாடலை மீண்டும் இந்தியாவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆக்டேவியா vRS மாடல் 2004 ஆம் ஆண்டு 150 Bhp திறனை கொண்ட 1.8 லிட்டர் டர்போ சார்ஜ் பெட்ரோல் என்ஜினுடன் வெளியிடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய சந்தையில் இந்த ஆக்டேவியா vRS மாடல் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் டீசல் என்ஜினுடன் கிடைக்கிறது. 2.0 லிட்டர் டர்போசார்ஜ் பெட்ரோல் enjin 220 Bhp திறனை வழங்கும் மேலும் 100 கிலோ மீட்டர் வேகத்தை 6.8 வினாடிகளிலும் அதிகபட்சமாக மணிக்கு 248 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது. அதேபோல் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் டீசல் எஞ்சின் 184 Bhp திறனை வழங்கும் மேலும் 100 கிலோ மீட்டர் வேகத்தை 8.1 வினாடிகளிலும் அதிகபட்சமாக மணிக்கு 232 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது.
அதிக திறன் வாய்ந்த என்ஜின் மட்டுமல்லாமல் கூடுதலாக சில உபகரணங்களும் இந்த மாடலில் கிடைக்கும். மேலும் ஆறு ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் DSG கியர் பாக்சிலும் கிடைக்கும். எனினும் இந்தியாவில் வெளியிடப்படும் மாடல் இந்தியாவிற்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.