ரூ 1.5 கோடி விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது மெர்சிடிஸ் பென்ஸ் E63 S AMG

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் E63 S AMG செடான் மாடலை ரூ 1.5 கோடி ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் E-கிளாஸ் செடான் மாடல்களிலேயே அதிக திறன் கொண்ட மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்தியாவில் E200, E220d மற்றும் E350d போன்ற மாடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடலில் AMG GT-R மாடலில் உள்ள 4.0 லிட்டர் கொண்ட ட்வின் டர்போ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 610Bhp திறனையும் 850 Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த திறன் 9 ஸ்பீட் கொண்ட AMG ஸ்பீட்ஷிபிட் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4Matic+ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலம் அணைத்து  வீலுக்கும் கடத்தப்படுகிறது. இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.4 வினாடிகளிலும் அதிகபடச்சமாக மணிக்கு 250 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது. மேலும் இந்த மாடலில் கம்பர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ் மற்றும் இண்டுவிடுவாள் என நான்கு ட்ரிவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் அதிக செயல்திறன் கொண்ட எஞ்சினை தவிர சில கூடுதல் ஒப்பனை மாற்றங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய முன்புற மற்றும் பின்புற பம்பர், புதிய கிரில், பின்புற ஸ்பாய்லர் மற்றும் AMG கிட் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் உட்புறத்தில் தட்டையான அடிப்புறம் கொண்ட ஸ்டீரிங் வீல், தோல் கவர் அலங்காரம் மற்றும் இரண்டு டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் E63 S AMG மாடல்  BMW M5 மற்றும் ஆடி RS7 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.