ஒரு வருடத்தில் 50,000 நெக்ஸன் கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது டாடா

டாடா நிறுவனம் வெளியிடப்பட்டு ஒரு வருடத்தில் 50,000 நெக்ஸன் கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. ரஞ்சன்கன் ஆலையில் இதுவரை 50,000 கார்களை உற்பத்தி செய்துள்ளதாக டாடா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான் குளோபல் NCAP சிதைவு சோதனையில் 4 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்று சாதனை செய்தது டாடா நெக்ஸன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் டாடா நெக்ஸன் மாடலின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. 

இந்த மாடல் மூன்று சிலிண்டர் கொண்ட 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் மற்றும் நான்கு சிலிண்டர் 1.5 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜினில் கிடைக்கும். 1496cc கொள்ளளவு கொண்ட டீசல் என்ஜின் 110PS @ 3,750rpm திறனையும் 260Nm @ 1,500-2,750rpm இழுவைதிறனையும் வழங்கும். மற்றும் 1198cc கொள்ளளவு கொண்ட பெட்ரோல் என்ஜின் 110 PS @ 5,000rpm திறனையும் 170Nm @ 2,000-4,000rpm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடலின் இரண்டு என்ஜின்களுமே ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் மற்றும் AMT ட்ரான்ஸ் மிஷனில் கிடைக்கும். மேலும் இதன் டீசல் என்ஜின் மாடலில் ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என டிரைவிங் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

 ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், ஆட்டோமேட்டிக் குளிரூட்டி, ஹர்மான் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், பின்புற சென்சார் மற்றும் கேமரா என இந்த மாடலில் ஏராளமான உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் 209 மில்லி மீட்டர் தரை இடைவெளி கொண்டது. இந்த செக்மென்ட்டில் மட்டும் இல்லாமல் டாடா நிறுவன மாடல்களிலேயே இது தான் அதிக தரை இடைவெளி கொண்ட மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.